அக அமைதி தியானம் இணையவழி தியானப் பயிற்சியினை ☑️நிறைவு செய்தவர்களுக்கும், ☑️நேரடி பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள நேரமில்லாதவர்களுக்குமான ஒரு சிறப்பு முன்னெடுப்பு "தினமும் தியானம் செய்வோம்"
"தினமும் தியானம் செய்வோம்" என்பது அக அமைதி தியான பயிற்சி வகுப்பில் இணையவழி தியானப் பயிற்சி வகுப்பினை நிறைவு செய்தவர்கள் மற்றும் நேரமின்மை காரணமாக பயிற்சிவகுப்பில் கலந்து கொள்ள இயலாதவர்களுக்காக துவங்கப்படும் ஒரு முக்கிய முன்னெடுப்பாகும்.
தியானம் கற்றவர்களின் உள்நோக்கியத் தேடல் பயணத்திற்கு உதவும் நோக்குடனும் அவர்கள் வாழ்வியல் மேம்பாட்டிற்கு பங்களிக்கும் நோக்குடனும் துவங்கப்பட்டுள்ளது.
5 முக்கிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு தினமும் தியானம் செய்வோம் என்ற முயற்சி அக அமைதி தியானப் பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்காக துவங்கப்படுகிறது
1. தினமும் தியானப் பயிற்சி செய்ய ஊக்கமளித்தல்
2. எழும் கேள்விகளுக்கான விளக்கங்கள் வழங்குதல்
3. அறிவு மற்றும் அனுபவப் பகிர்வு
4. உள் நோக்கிய தேடல் பயணத்தில் முன்னேற உதவுதல்
5. வாழ்வியல் மேம்பாட்டிற்கு வழிகாட்டல்
அகிலத்தின் அமைதி நமது ஒவ்வொருவரின் அகத்தின் அமைதியில் விதையாக வாழ்கிறது. அதனை உணர்ந்தபடியால் "தினமும் தியானம் செய்வோம்" என்ற இம்முன்னெடுப்பில் இணைபவர்கள் வாழ்நாள் முழுமைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதன் வாயிலாக தங்கள் வாழ்வை மேம்படுத்தி சமூகத்திற்கும் பெரும் பங்களிப்பு செய்யலாம்.
ஏழு பாகங்கள்
40+ காணொளிகள்
12 வகை மீளாய்வு
பாகம் 1
அறிமுகம்
பாகம் 2
ஆனா பானா சதி
பாகம் 3
அறிமுகம்
நாள் 1 ஆனா பானா சதி
நாள் 2 விபாசனா + ஆனா பானா சதி
நாள் 3 விபாசனா + ஆனா பானா சதி
பாகம் 4
அறிமுகம்
முதல் 3 நாள் - ஆனா பானா சதி தியானம்
அடுத்த 7 நாள் - விபாசனா தியானம்
பாகம் 5
பாகம் 6
பாகம் 7
பயிற்சியாள்ர் ரா. மகேந்திரன்
எளிதில் இணையலாம்
வாழ்நாள் முழுமைக்கும்
எப்பொழுதும் கற்கலாம்
எங்கிருந்தும் கற்கலாம்
தனிச் செயலி (Mobile app)
அக அமைதி தியானப் பயிற்சி வகுப்பை நிறைவு செய்தவர்களுக்கு மட்டும்
நேர்மறை மாற்றத்தை தேடுவோர் அனைவருக்கும் உதவும் பயிற்சி. வாழ்வை மாற்றிடும் அனுபவத்தை எனக்கு கொடுத்தது. அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய தியானப் பயிற்சி.
தமிழ் செல்வி மீனாட்சி சுந்தர்
3 நாள் தியானப் பயிற்சி
பின்பற்றுவதற்கும் செயல்படுத்துவதற்கும் எளிய வகையில் தியான முறைகளை கற்பித்தார் பயிற்சியாளர். மீளாய்வு, மதிப்புரைகள் மூலம் கற்ற தியான முறைகளை நன்கு அறிந்து கொண்டேன்.
பால கிருஷ்ணன்
10 நாள் தியானப் பயிற்சி
பயிற்சிக்குப் பின் முழு அமைதியுடனும் புத்துணர்வுடனும் காணப்படுகிறேன். பயிற்சியாளர் மகேந்திரனுக்கு எனது வணக்கங்கள்.
முத்துச்சாமி டி
3 நாள் தியானப் பயிற்சி
இந்தப் பயிற்சி ஒவ்வொரு மனிதனும் கற்றுக் கொள்ள வேண்டிய பயிற்சி. உள் நோக்கிய பயணம் அமைதியையும் ஆனந்தத்தையும் தரும் என்பதனை அறிந்து கொண்டேன்.
முத்துராமலிங்கம்
3 நாள் தியானப் பயிற்சி
ஆனா பானா சதி, விபாசனா தியானமுறை எனது உணர்வு நிலைகளில் பெரும் மாற்றத்தை நிகழ்த்தியது. பெரும் தத்துவங்களை எளிமையாக புரிய வைத்தார் பயிற்சியாளர்
குணசீலன் (எ) இறவான்
10 நாள் தியானப் பயிற்சி
10 நாள் தியானப் பயிற்சி இன்றைய வாழ்வியலுக்கு ஏற்ற வகையில் எளிமையானதாகவும் நேரடியாக எனது தினசரி வாழ்வில் நல்மாற்றங்களை தந்தது.
ப.இராசேந்திரன்
10 நாள் தியானப் பயிற்சி
முக்கியம் : வாழ்நாள் முழுமைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்
யார் பதிவு செய்யலாம்?
அக அமைதி தியானம் இணையவழி தியானப் பயிற்சி வகுப்பை நிறைவு செய்தவர்கள் மற்றும் நேரமின்மை காரணமாக பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இயலாதவர்கள் பதிவு செய்யலாம்.
நான் பயிற்சியை நிறைவு செய்யவில்லை நான் கலந்து கொள்ளலாமா?
உங்களால் காணொளிப் பதிவுகள் மூலமாக கற்றுக் கொள்ள இயலும் என்ற முழு நம்பிக்கையும், அதற்கான மன உறுதியும் இருந்தால் தினமும் தியானம் செய்வோம் முயற்சியில் இப்போதே இணைந்து கற்கத் துவங்கலாம். இல்லையெனில் இணையவழி நேரடி பயிற்சி வகுப்பை நிறைவு செய்த பிறகு தினமும் தியானம் செய்வோம் முயற்சியில் உங்களை இணைத்துக் கொள்ளலாம்.
எவ்வளவு நாளைக்கு நான் இப்பயிற்சி பதிவுகளைப் பயன்படுத்த இயலும்?
நீங்கள் விரும்பும் காலம் வரை பயன்படுத்தலாம்.
இதற்கென தனிச் செயலி உள்ளதா?
ஆம். Android, iOS செயலிகள் உள்ளன. அவற்றை பதிவிறக்கி நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பயிற்சியின் போது எங்களுக்கு தோன்றும் கேள்விகளை கேட்க இயலுமா?
ஆம். பயிற்சியின் போது தோன்றும் கேள்விகளைக் கேட்க தனிப் பகுதி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது.
நான் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்?
இந்தப் பயிற்சிக்கு கட்டணம் எதுவும் இல்லை. உங்கள் பங்களிப்பாக நீங்கள் ரூ3000 முதல் உங்களால் ஆன தொகையை செலுத்த இயலும். அயல் நாடு வாழும் தியானிகள் $200 முதல் உங்களால் இயன்ற தொகையைச் செலுத்தலாம்.
40+ காணொளிகள்
நமது அக அமைதியை மேம்படுத்தவும், வாழ்வியலை மேலும் செம்மைப் படுத்தவும் அக அமைதி தியானத்தின் புதிய மற்றும் முக்கிய முன்னெடுப்பான "தினமும் தியானம் செய்வோம்" என்ற இந்த முயற்சியில் இணையுங்கள்.
அன்புடையீர்
அனைவருக்கும் அன்பான வணக்கம்.
சிறுவயதிலிருந்தே எனக்கு உள்நோக்கிய தேடல் இருந்து வந்தாலும், நான் தனிப்பட்ட முறையில் எவ்வித தியானப் பயிற்சிகளையும் கற்றுக் கொள்ள அவசியம் ஏற்பட்டதில்லை. அதற்கு என் குடும்பச் சூழல் மற்றும் வாழ்வியல் முறையே காரணம்.
ஆனால் 2017 ஆம் ஆண்டு இசை நெறியாள்கை பற்றிக் கற்றுக் கொள்வதற்காக சென்னையில் தங்கியிருந்த தருணத்தில் அங்கு பயின்று கொண்டிருந்த பல மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நானும் 10 நாட்கள் விபாசன பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டேன்.
அந்த பயிற்சி வகுப்பு முடிந்து வெளியே வந்த தருணத்தில் நான் எண்ணியது இது ஒன்று தான். இத்தகைய எளிய மற்றும் வாழ்விற்கு பெரிதும் பயன்படும் பயிற்சி ஏன் அனைவருக்கும் கிடைக்கக் கூடாது? அதனை அனைவரும் கற்றுக் கொள்ள தொடர்ந்து நான் பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற முடிவை எடுத்துக் கொண்டேன். அதன் விளைவு, 2017 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பயிற்சி செய்வதோடு பலரும் கற்றுக் கொள்ள தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறேன். அந்த முயற்சியின் மூலமாக உங்களை சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. வாருங்கள் பயிற்சி வகுப்பில் சந்திப்போம்
அன்புடன்
ரா. மகேந்திரன்